tamilnadu

ஊழல் குறித்து பாஜக பேசலாமா?

சென்னை, டிச. 24- பொன்முடி விவகாரத்தில் ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி  இல்லை என திருமாவளவன் விமர்ச னம் செய்துள்ளார்.

தந்தை பெரியாரின் 50ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு விசிக தலைவர் திருமாவ ளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பெரியாரின் அரசியலை நீர்த்துபோக செய்வதற்கு  சனாதன சக்திகள் முயற்சி செய்து  வருகின்றன. தொடர்ந்து பெரியா ருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி  வருகிறார்கள். பெரியார் ஒரு  அரசியல் கட்சிக்கோ, இயக்கத்திற்கோ சொந்தமானவர் அல்ல. ஒட்டுமொத்த விளிம்புநிலை மக்களுக்கு சொந்த மானவர்” என்று கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வரு கிறது. எதிர்க் கட்சிகளையும் அர சியலமைப்புச் சட்டத்தையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ் பெண்ட் செய்து வெளியேற்றிவிட்டு மசோதாக்களை நிறைவேற்றி வரு கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோத மானது. அதை உன்னிப்பாக கவனித்து வரும் மக்கள், நாடாளுமன்றத் தேர்த லில் பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டு வார்கள் என்றும் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரத்தை பயன்படுத்தக் கூடாது, வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 29ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். மழை வெள்ளம் காரணமாக விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டை ஜனவரி இறுதி வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளோம் என்றார்.

பொன்முடி வழக்கை சட்டப் படி எதிர்கொள்வதற்கு திமுக வழக்கறி ஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரி வித்த அவர், அமைச்சர் பொன்முடி மேல்முறையீட்டுக்குச் செல்ல ஆயத்த மாகி உள்ளார். சட்டப்படி உரிய தீர்ப்பை அவர்கள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், பாஜக வைச் சேர்ந்தவர்கள் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதையே இல்லை. சிஏஜி அறிக்கை மூலம் மெகா ஊழல் வெளியாகியுள்ளது. ஊழல் ஆட்சி யாக ஒன்றிய அரசு உள்ளது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், மத்திய அரசைப் பொறுத்த வரை ஆண்டுதோறும் வழக்கமாக தரக்கூடிய நிதியைத்தான் இரண்டு தவணைகளாக 900 கோடியை விடு வித்துள்ளனர். ஆனால், நிவாரணத் திற்காக கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. ஆண்டுதோறும் வழக்கமாக தரும் நிதியை தந்துவிட்டு தாங்கள் தான் கரிசனம் உள்ளவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடு கிறார்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன் பேசியுள்ளது அதிர்ச்சிய ளிக்கிறது, அவர் தன்னை பிரதம ராக நினைத்துக் கொண்டு பேசுவது போன்ற தொனியை வெளிப்படுத்து கிறார். இதன் மூலம் தமிழ்நாடு மக்க ளின் உணர்வுகளை காயப்படுத்து கிறார் என்று காட்டமாக திருமாவள வன் குற்றம் சாட்டினார்.