அலுவல் மொழி விதிகளை மீறக் கூடாது என்று ஒன்றிய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? இல்லை மரத்துப் போனதா? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
ஆங்கிலம் நன்கு அறிந்த அமைச்சர்கள் கூட நாடாளுமன்றத்தில் இந்தியில் பதில் சொல்வதும், பேசுவதும், இந்தி பேசாத மாநிலங்களின் எம்பிக்களுக்கு இந்தியில் கடிதங்கள் எழுதுவதும் அதிகரித்துள்ளது.
அறியாமல் நடைபெறும் தவறு அல்ல. அறிந்தே இந்தி திணிப்பை செய்கிறார்கள். தென் மாநில எம்பிக்கள் புரிந்து கொள்ளா முடியாவிட்டாலும் கவலை இல்லை என்றே கருதுகிறார்கள்.
ஏற்கனவே நான் சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் உள்துறை இணை அமைச்சர் எனக்கு இந்தியில் எழுதிய கடிதம் தொடர்பாக தொடுத்த வழக்கில் அலுவலகத்திலிருந்து தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டது என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார்.
அமைச்சரின் பதிலை ஏற்றுக்கொண்டு, இனி அலுவல் மொழி விதிகளை மீறக் கூடாது என்று ஒன்றிய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? இல்லை மரத்துப் போனதா?