சென்னை,நவம்பர்.04- புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும், அதில் எந்த மாற்றமும் இல்லை. மழை, வெள்ளம் பாதித்த பள்ளிகளின் சூழ்நிலையைப் பொறுத்து ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.