விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உண்டியல் மூலம் கட்சிக்கு நிதி திரட்டி வருகின்றனர். மக்கள் மனமுவந்து நிதி அளித்து வருகின்றனர். வீடுகளில் பொதுமக்களிடம் ரூ.15 லட்சம் வரை நிதி வசூலாகி உள்ளது
. இல்லை என்ற சொல்லே இல்லை. கண்டமங்கலம் கிராமத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியின் தலைமையில் வீடு வீடாக பொது வசூல் ஐந்து நாட்கள் நடைபெற்றது. அக்கிராமத்தில் 1050 வீடுகளில் சந்தித்து நிதி வசூல் செய்ததில் ரூ.1,02,850 / மக்கள் வாரி வழங்கினர்.
இதே போல முண்டியம்பாக்கம் கிராமத்தில் உண்டியல் மூலம் ரூ.62000/ வசூலாகி உள்ளது. நிதி அளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் இத்தகைய அனுபவங்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு கிடைத்து வருகின்றன. என்றென்றும் மக்களோடு இருக்கும் கட்சி என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
- டி.ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)