tamilnadu

img

சென்னை ஐ.சி.எப் ஆலையை மூடும் திட்டம் ஏதுமில்லை

சென்னை:
சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையை மூடும் திட்டம் இல்லை என்றுமத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் கீழ்இயங்கி வரும் சென்னை ஐ.சி.எப், ரயில் பெட்டிகள்தயாரிப்பதில் முதன்மையானதாக விளங்குகிறது. 1952ல்உருவாக்கப்பட்டு 1955 முதல் செயல்பாட்டிற்கு வந்த ஐ.சி.எப்-இல் தற்போது வருடத்திற்கு 2,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 
இந்நிலையில், சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை மூடும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.அப்போது அவர், ‘சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையை மூடும் திட்டம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. பெரம்பூர் ஐ.சி.எப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இங்குள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பல சாதனைகளைப் புரிந்துள்ளனர். சமீபத்தில் அதிவேகரயில் ‘பாரத் ரயில்’ இங்குதான் தயாரிக்கப்பட்டது. எனவே, ஐசிஎப் நிறுவனம் கிரீடத்தில் உள்ள நகை போன்றதாகும். அதனை மூடும் திட்டம் எப்போதும் மத்திய அரசுக்கு இல்லை. இதேபோன்று இந்தியாவில் புல்லட் ரயில் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. புல்லட் ரயில் திட்டம் விரைவில் இந்தியாவில் செயல்படுத்தப்படும். மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்பாதைகளும் மின் மயமாக்கப்படும்’ என்று தெரிவித்தார்.