சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பட்டு வரும் ரயில்வே திட்டங்க ளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என்றும் 74 சதவீத நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ் வினி வைஷ்ணவ்-வுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை எடுப்பதில், மாநில அரசு காலதாமதம் செய்வதாக ஒன் றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாக செய்தி வெளியானது.
இதற்கு பதிலளித்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன் வெளியிட்ட அறிக்கை வரு மாறு:
தமிழ்நாட்டில் ரயில்வே திட் டங்களுக்கு மொத்தம் 2,443 ஹெக்டேர் நிலங்களை எடுக்க அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி- மதுரை (வழி- அருப் புக்கோட்டை) புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கு 937 ஹெக்டேர், திருவண்ணாமலை- திண்டிவனம் புதிய அகல ரயில் பாதை திட்டத் துக்கு 276 ஹெக்டேர், ஈரோடு மாவட்டத்தில், ஆதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க 13 ஹெக்டேர் என 1,226 ஹெக்டேர் நில எடுப்புக்கு தமிழக அரசால் நிர் வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிதியும்-ஒப்புதலும் தரவில்லை
இந்நிலையில், 2 ஆண்டுகளாக ரயில்வே துறை நிதி ஒதுக்காததால், நில எடுப்புக்கு ஒப்புதல் அளிக்கா ததால் பணிகள் முடங்கியுள்ளது. இது தவிர, மீதமுள்ள 1,216 ஹெக் டேர் நிலங்கள் திண்டிவனம்- நகரி அகல ரயில் பாதை, திருவண்ணா மலை- திண்டிவனம் அகல ரயில் பாதை, மதுரை- தூத்துக்குடி அகல ரயில் பாதை, மணியாச்சி- நாகர் கோவில் அகல பாதை, திருவனந்த புரம்- கன்னியாகுமரி அகல பாதை, தூத்துக்குடி- மதுரை (வழி- அருப் புக்கோட்டை) புதிய அகல பாதை, சின்னசேலம்- கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில் பாதை, மொரப்பூர்- தருமபுரி புதிய அகல ரயில் பாதை, கொருக்குப்பேட்டை- எண்ணூர் 4-வது வழித்தடம் ஆகிய திட்டங்க ளுக்கு நிலம் எடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு - விழுப்புரம் அகல ரயில் பாதை, கதி சக்தி பல் முனை மாதிரி சரக்கு முனையம், மயிலாடுதுறை- திருவாரூர் அகல ரயில் பாதை, பட்டுக்கோட்டை நான்கு முனை சந்திப்பு, மன்னார்குடி- நீடா மங்கலம் அகல ரயில் பாதை, சென்னை கடற்கரை- கொருக்குப் பேட்டை மூன்றாவது, நான்காவது வழித்தடம் மற்றும் விழுப்புரம்- திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டங்களுக்கு என 907.33 ஹெக் டேர் அதாவது 74 சதவீதம் நில எடுப்பு பணிகள் முடிந்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. மீதமுள்ள நில எடுப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன.
சென்னை கடற்கரை- எழும்பூர் இடையிலான 4-வது வழி பாதை அமைக்கும் திட்டத்தில், கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால் வாயை ஒட்டி நீர்வழிப் புறம்போக் கில் 2,875 ச.மீ. நிலம் வழங்கப்பட்டது.
நில எடுப்பு பணியில் தனிக்கவனம்
மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள இதர அரசு புறம்போக்கில் 383.5 ச.மீ. நிலங்கள் ரயில்வே துறைக்கு நில மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இதுதவிர 1,823.87 ச.மீ. நிலத்துக்கு பாதுகாப்பு அமைச்ச கத்திடம் 278 ச.மீ. நிலத்துக்கு ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் நிலு வையில் உள்ளது.
இராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையிலான புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டத்தில் சுற்றுச் சூழல் சமநிலை பாதிக்கும் என்ப தால், இத்திட்டத்தை கைவிடும்படி பிரதமரிடம் முதல்வர் கோரினார். எனவே, ரயில்வே திட்டங்களுக் கான நில எடுப்பு பணிகள் தனிக்கவ னம் செலுத்தி உரிய காலத்துக்குள் அவற்றை முடிக்கும் வகையில் தமி ழக அரசு விரைந்து செயலாற்றி வரு கிறது. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.