tamilnadu

img

மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் 17 ஆயிரம் பேரை இனப்படுகொலை செய்ததாக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது

மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் 17 ஆயிரம் பேரை இனப்படுகொலை செய்ததாக அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹரிலால் எழுதி ஞா.சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பில், தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து ‘மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது?’ என்ற நூலை பதிப்பித்துள்ளன. இந்த நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (டிச.31) சென்னையில் நடைபெற்றது. நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அருகில் எழுத்தாளர் வீ.பா.கணேசன், பாரதி புத்தகாலயம் க.நாகராஜன் உள்ளனர்.