tamilnadu

4 தொகுதிகளில் இன்றும் நாளையும் மனுதாக்கல் இல்லை

சென்னை, ஏப்.26-திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த திங்கட்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. மே 2-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஏப்ரல் 27 ஆம் தேதி வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறையும், மறு நாள் ஞாயிற்றுக் கிழமை 28 ஆம் தேதி வார விடுமுறையாகும். இதனால், இந்த 4 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் 27 மற்றும் 28 ஆம் தேதி பெறப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

;