2 ஆவது நாளாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சென்னை, டிச.5 - சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த அதிக மழையால் தண்டவாளம் மற்றும் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழை வெள்ளம் மெதுவாக வடிந்து வருகிறது. ஆனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செவ்வாய்கிழமை (டிச.5) 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டன.
சில ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு கருதி தெற்கு ரயில்வே இந்த மாற்றங்கள் செய்துள்ளது.
சென்ட்ரல், எழும்பூரில் இருந்து ரயில்கள் ரத்து மற்றும் வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக வடமாநில பயணிகள் காத்து கிடந்தனர்.
தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம்: அமைச்சர் தகவல்
சென்னை, டிச.5 - `மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. மாநகரில் ஒரு சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் பால் குறித்து அச்சப்பட தேவையில்லை. பால் விநியோகம் இல்லை என்றால் தகவல் தெரிவித்து, உடனடியாக சீர் செய்யப்படும் எனவும் சூழலை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்
சென்னையில் 214.70 செ.மீ மழை
சென்னை, டிச.5 - சென்னையில் புயல் காரணமாக சுமார் 36 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்திருக்கிறது. அதில் 6 மணி நேரம் மிக பலத்த கன மழை பெய்திருக்கிறது. கடந்த 3 மாதங்க ளில் சென்னை மாவட்டம் பெற்ற மழை அளவை விட கடந்த 3 நாட்க ளில் அதிக மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் 214.70 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியுள்ளது. அதனால்தான் சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்க நேரிட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாவட்டத்திற்கு இணை யாக மழை பெய்திருக்கிறது. கடந்த 2 நாட்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் 210.51 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டில் 87.85 செ.மீ. மழையும் காஞ்சிபுரம் 67.96 செ.மீ. மழையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 66.08 செ.மீ மழையும் பெய்துள்ளது.
சென்னை மாநகரம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்
தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி
சென்னை, டிச.5 - சென்னையில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட 80% இடங்களில் மின்சார சேவை மீண்டும் வழங்கப் பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47ஆண்டு களில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. சென்னை வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் முழு வீச்சில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர் பாக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட 80 விழுக்காடு இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது
மெட்ரோ ரெயில் சேவை தொடர்ந்து தடையின்றி இயங்கி வருகிறது. சென்னை முழுவதும் தற்போது 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் 30 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின் றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள் ளூர் ஆகிய இடங்களில் 70 விழுக்காடு தொலைத் தொடர்பு சீரமைக்கப்பட் டுள்ளது.
மொத்தமாக 411 முகம்க ளில் 32,158 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 30 படகுகள் மீட்புபணிகளில் களத்தில் உள்ளன. 3,000 களப்பணியாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.
மேலும் 2000 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 180 பேர் தற்போது வரை மீடிக்கப்பட்டுள்ளனர். 85 கால்நடை உயிரினங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. 338 மரங்கள் விழுந்துள்ளன, அதில் 147 மரங்கள் அகற்றப் பட்டுள்ளன.
இவ்வாறு தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா கூறினார்.
4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
சென்னை,டிச.5- சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமையும் (டிச.6) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்று காரண மாக மரங்கள் முறிந்து விழுந்துள் ளன. இதில் நான்கு மாவட்டங்க ளில் பலத்த பாதிப்பை சந்தித் துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.
அரசின் துரித நடவடிக்கை யால் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் சில இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடை பெற்று வருவதால் புதனன்று (டிச.6) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில்; ‘மிக்ஜம்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு டிச.4,5 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டிச.6 அன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு
சென்னை, டிச.5- தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 11 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் ஏற்கனவே அறி விக்கப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை (டிச.6) வரை பள்ளிகளுக்கு தொட ர்ந்து விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு
சென்னை, டிச.5- சென்னையில் வரும் 9 , 10- ஆம் தேதிகளில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் போட்டிகள் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூறியது. இந்தப் போட்டிகள் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி இருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் இருந்து பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்று.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கார் பந்தயம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவதாக இருந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நிவாரண பணிகள் தொடரட்டும்: முத்தரசன்அறிக்கை
சென்னை,டிச.5- வரலாறு காண பேரிடர் கால நெருக்கடியில் இருந்து பாது காப்பாக மீட்க அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளில் இருந்து மக்களுக்கு உதவ வேண்டும் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன் வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு முன்னெச் சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த போதும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைத்து, லட்சக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் அரசு, மாநகராட்சியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளில் இருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், வர்க்க – வெகுமக்கள் அமைப்புகளும் ஈடுபட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கூறி யுள்ளார்.
சசிகலாவை நீக்கியது செல்லும்: நீதிமன்றம்
சென்னை, டிச.5 - ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதற்கு அதிமுக பொதுக்குழு வில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவியில் இருந்து, கட்சியில் இருந்து நீக்கியது. அதற்கு பதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப் பாளராக எடப்பாடி பழனிசாமி யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந் தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறை யீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடா மல் ஒத்திவைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் மிக் ஜம் புயல் காரணமாக சென்னை நீதி மன்றத்திற்கு விடுமுறை அளிக்கப் பட்டிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க் கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உரிமை யியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.