tamilnadu

img

தொழிலாளர்கள் சிஐடியு சங்கம் அமைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்

காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரத்தில், அமெரிக்க நாட்டின் லேப்டாப் தயாரிக்கும் தொழிற்சாலையான ப்ளக்ஸ்டாரானிக் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளர்கள் சிஐடியு சங்கம் அமைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். அந்த தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மறுத்து வரும் நிர்வாகத்தை கண்டித்து செவ்வாயன்று (ஜன.9)தொழிற்சாலைக்கு அருகாமையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ராஜீவ்காந்தி, சதாம் உசேன், ராமு மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.