டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவு!
மும்பை, ஆக. 12 - டாலருக்கு நிகரான ரூபா யின் மாற்று மதிப்பு இது வரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ஞாயிறன்று ஒரு டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 83 ரூபாய் 95 காசு களாக இருந்த நிலையில், திங்களன்று 83 ரூபாய் 97 காசுகளாக வீழ்ச்சி அடைந் துள்ளது.
மேட்டூரிலிருந்து 35,000 கன அடி நீர் திறப்பு!
சேலம், ஆக. 12 - மேட்டூர் அணையானது, கடந்த ஜூலை 30 அன்று தனது முழு கொள்ளள வான 120 அடியை எட்டியது. பின்னர் அணைக்கான நீர்வர த்து சரிவின் காரணமாக, ஆகஸ்ட் 7 அன்று 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப் பட்டது. அணையின் நீர்மட்டம் 119.24 அடியாக இருந்தது. பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி அள விற்கு நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணை நீர்மட்டம் திங்களன்று 2-ஆவது முறையாக 120 அடி என்ற முழுக் கொள்ளளவை எட்டி யது. மேலும் அணையி லிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் 9,000 போலீசார் பாதுகாப்பு!
சென்னை, ஆக. 12 - 15.08.2024 அன்று 78-ஆவது இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு, சென் னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண் உத் தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் மேற் பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற் றும் காவலர்கள் என மொத் தம் 9 ஆயிரம் காவல் அதி காரிகள் மூலம் சிறப்பு பாது காப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. குறிப்பாக, சுதந்திர நாள் விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற் றும் அதை சுற்றியுள்ள பகு திகள் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து முன்பதிவு துவக்கம்
நாகப்பட்டினம், ஆக. 12 - நாகப்பட்டினம் துறை முகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பய ணிகள் கப்பல் போக்கு வரத்து ஆகஸ்ட் 16 அன்று தொடங்கப்பட உள்ளது.
சிவகங்கை என்கிற பயணிகள் கப்பல் இயக்கு வதற்கு தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து, பய ணத்திற்கான முன்பதிவு திங்களன்று (12.08.24) நள்ளிரவு 12 மணிக்கு www.sailindsri.com என்று இணையதளம் மூலம் முன் பதிவு தொடங்குகிறது. கப்பல் பயணம் தொடர்பான விவரங்கள், விதிமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் இன்று (13.08.24) செவ்வாய்க்கிழமை வெளி யிடுவதாக தெரிவித்துள்ளது.