சென்னை, ஜூலை 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ரும், காப்பீட்டுக்கழக ஊழி யர் சங்கத்தின் சென்னைக் கோட்டம் ஐஐ- ன் முன்னாள் நிர்வாகியுமான தோழர் தன்ராஜ் உடல் நலக்குறைவால் புதனன்று (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 73. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் மிகுந்த ஈடு பாடுடனும், இயக்க செயல்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றியவர் தோழர் தன்ராஜ். மேலும் எல்ஐசி ஊழியர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர். பார்வை குறைபாடு இருந்தபோதிலும் தொடர்ந்து இயக்கங்களில் நிகழ்விலும் பங்காற்றி வந்தார். 1980களில் இரண்டே உறுப்பினர்கள் இருந்த நெய்வேலி கிளையில் சகோதர அமைப்புகளை திரட்டி 14 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி மக்களின் கவனத்தி ஈர்த்தவர் தன்ராஜ். பணி ஓய்வுக்குப் பின்னரும் சங்க நிகழ்ச்சிகளில் அவர் வருகை தவறியது கிடை யாது. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த தன்ராஜ் சிகிச்சை பல னின்றி புதனன்று (ஜூலை 31)உயிரிழந்தார். அவருக்கு சந்திரா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, வி.ஜான கிராமன், பகுதிச் செயலா ளர் எம்.ஆர்.மதியழகன், காப்பீட்டுக்கழக தென்மண்டல பொதுச் செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் கே. சுவாமிநாதன், கோட்டம் 2ன் தலைவர் கே.மனோகரன், செயலாளர் எம்.தன செல்வம், முன்னாள் தலை வர் எஸ்.ராஜப்பா உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தி னர். பின்னர் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்ய ப்பட்டது.