சென்னை, செப். 5 - நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 67 சுங்கச்சாவடிகளை அமைத்து ஒன்றிய பாஜக அர சானது, கட்டணம் என்ற பெயரில் நீண்ட காலமாக கொள்ளையடித்து வரு கிறது. கடந்த செப்டம்பர் 1 அன்று 25 சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது, விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி என தமிழ்நாட்டில் புதி தாக 3 சுங்கச்சாவடிகளை அமைக்கப் போவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இது பொது மக்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்களை அதிர்ச்சிக்கு உள் ளாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் காலாவதியான 30 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலித்து அடாவடியில் ஈடு படுவதாக ஒன்றிய அரசு மீது தமிழக அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டி யிருந்ததும் குறிப்பிடத்தக்கது.