தலித் மக்களை அனுமதிக்காததால், விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயிலை மூடி தமிழக அரசு கடந்த ஆண்டு சீல் வைத்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்றாட பூஜைகளுக்காக மட்டும் கோயிலைத் திறக்கலாம்; பூசாரியை தவிர வேறு யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டுள்ளார்.