tamilnadu

img

தமிழ்நாடு சட்டமன்றம் நாளை கூடுகிறது

சென்னை,பிப்.10- தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம்  பிப்ரவரி 12 அன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்குகிறது. கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.

இதை யடுத்து, இந்த ஆண்டுக்கான முதல்  சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர்  உரை இடம்பெறுவது உறுதியானது. அதன்படி பிப். 12 அன்று சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெறும். இறுதியாக முதலமைச்சர் பதிலளிக்கிறார். அதனைத் தொடர்ந்து, 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19 அன்று தேதி  தாக்கல் செய்கிறார்.

இதற்கிடையே, சட்டப்பேரவை அரங்கம் வண்ணம் பூசப்பட்டு, இருக் கைகள், மேசைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. சட்டப்பேரவை அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தின் முகப்பு பகுதி, ஆளுநர், பேரவைத் தலைவர் வருகை தரும் பகுதிகள், உறுப்பினர்கள் வரும் வாயில்கள், எதிர்க்கட்சி தலைவர் அறை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட இடங்கள் தயாராகி வருகின்றன.

மேலும், சட்டப்பேரவை நிகழ்ச்சி களை ஒளிபரப்புவதற்காக வைக்கப் பட்டுள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ள தாக பேரவைச் செயலகம் அதிகாரி கள் தெரிவித்தனர். 50 அங்குலம்  அளவில் இருந்த திரைகளின் அகலம், இப்போது கூடுதலாக்கப் பட்டுள்ளது.