சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தடுத்து நிறுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் இன்னும் எங்கள் உத்தரவு நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இடத்தைக் காலி செய்ய உங்களுக்குத் தேவையான நேரம் அளிக்கப்பட்டிருந்தது. எங்களது உத்தரவு நீர்த்துப்போவதை விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.
மாற்று இடம் வழங்குவதாக பேரவையில் முதல்வர் அளித்திருப்பது உறுதிமொழிதானே? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.