விழுப்புரம், ஜூன் 10- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறு மதுரை, சித்திலிங்கமடம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க மறுக்கப்பட்ட இதையொட்டி 10.6.2024 அன்று திங்கட்கிழமை 100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான நல சங்கம் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் பிடிஒ அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் கஜலட்சுமி தலைமை தாங்கி னார். போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் பி.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறு மதுரை, டி.எடையார், டி.புதுப்பாளை யம், ஆமூர்,மணக்குப்பம், சித்திலிங்கமடம் உள்ளிட்ட 10- க்கும் ஊராட்சிகளில் விண்ணப்பம் 6- கொடுத்தும் இதுவரை பணி வழங்கப்படவில்லை,
உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசி, காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வந்த மாவட்ட உதவி ஊராட்சி அலுவலர் பொன்னம்பலம் மாற்றுத்திறனாளிகள் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் வரும் 13- ம் தேதி கொள் 100 வேலை வழங்குவதாக உறுதி அளித்தார். அதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர். போராட்டத்தில் நிர்வாகி ஏ.கோவிந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.