tamilnadu

img

தமிழகத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ‘மிக்ஜம்’ புயல்

சென்னை, டிச. 6 - ‘மிக்ஜம்’ புயல் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திற்கு இடைக் கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜம்’ புயல் காரண மாக பெய்த வரலாறு காணாத பெரு மழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  சாலை கள், பாலங்கள், பொதுக் கட்டடங் கள் என பல்வேறு உட்கட்டமைப்பு கள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் விளக்க மாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பி ட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060  கோடியினை உடனடியாக வழங்கிடு மாறு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழுமையான ஆய்விற்குப் பின் விரிவான சேதஅறிக்கை

மேலும், ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப் பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும்  வலி யுறுத்தியுள்ளார்.

திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தில்லி யில் பிரதமர் மோடியை நேரில்  சந்தித்து, முதல்வரின் கடிதத்தை வழங்குவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெள்ள நிவாரண நிதி கருணை அல்ல; கடமை தாமதமின்றி உடனே வழங்குக : சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், புதனன்று அறிக்கை விடுத்துள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

இதுவரை 17 பேர்  பலியான துயரம்

மிக்ஜம் புயல் மற்றும் கன மழை சென்னையில் பல்வேறு பகுதி களிலும், திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங் களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங் களில் பல பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இதுவரை 17 பேர் பலியான துயர செய்திகள் வந்துள்ளன. பாதிப்பு கள் குறித்தும், மாநில அரசு கூடு தலாக எடுக்க வேண்டிய நட வடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே வலியுறுத்தி யுள்ளது.

நிவாரணப் பொருட்களைக் கூட வழங்க முடியாத நிலை

தற்போது கீழ்க்கட்டளை, கோவிலம்பாக்கம், வடக்குப்பட்டி மற்றும் நாராயணபுரம் பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் நாரா யணபுரம் ஏரியில் உடைப்பு ஏற் பட்டது. இதன் காரணமாக பள்ளிக் கரணை, பெருங்குடி, முடிச்சூர், காரப்பாக்கம், வேளச்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. தாம்பரம் - வேளச்சேரி சாலையும், பல்லா வரம் - துரைப்பாக்கம் சாலை உள்ளிட்டு  அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஆயிரக்கணக் கான வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ள தால் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. படகு அல்லது வான் வழியாகவே நிவாரணப் பொருட்களை வழங்க முடியும் என்ற நிலைமை உள்ளது.

கடும் நெருக்கடியில் விவசாயிகள் - தொழிலாளர்கள்
மதுரவாயல் மற்றும் பெரியமேடு பகுதி களில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதிகளி லும் வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது. திருவொற்றியூர் கொசஸ்தலை ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ள பாதிப்புகள் உருவாகியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளது. நெற்பயிர் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.500 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உணவு விநியோக தொழிலாளர்கள் நெருக்கடியில் உள்ளார்கள். ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கை கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு கேட்டுக் கொண்ட அடிப்படையில் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனடியாக அளித்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்துகிறது. 
நிவாரண நிதி ஒதுக்கீட்டில் ஏமாற்றும் போக்கு கூடாது
இதற்கு முந்தைய இயற்கை பேரிடர்களின் போதெல்லாம் மாநில அரசு கேட்ட உதவிக்கும் ஒன்றிய அரசு வழங்கியதற்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளி இருந்தது  என்பதை அறிவோம். இந்த முறை யாவது முழுமையான தொகையை வழங்கிட வேண்டும். இது கருணை அல்ல, கடமை என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

எனவே, வரலாறு காணாத மழைப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளி லிருந்து மக்களை பாதுகாப்பதற்கான கடமையை ஒன்றிய அரசு செய்திட வேண்டும், தமிழக அரசு கோரியுள்ள ரூ.5060 கோடி இடைக்கால நிவார ணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும், தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்பி மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்து உரிய வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் ஒன்றிய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.