சென்னை, செப். 13- திருநீர்மலை பேரூராட்சியில் குடி நீர் இணைப்பு கேட்டு மக்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. தாம்பரத்தையடுத்து திரு நீர்மலை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள திருமங்கை ஆழ்வார் புரம் தங்கவேல் தெருவில் நான்கு தலைமுறைகளாக மக்கள் வசிக்கின்றனர். இத்தெருவிற்கு முறையான சாலை வசதியையும், குடிநீர் இணைப்பையும் பேரூராட்சி நிர்வாகம் வழங்காமல் உள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளுக்கு தங்கவேல் தெருவழி யாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, குவாரி முத லாளிகளுக்கு ஆதரவாக சாலையை செப்பனிடாமலும், குடிநீர் இணைப்பு வழங்காமலும் பேரூராட்சி நிர்வாகம் உள்ளதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தங்கவேல் தெரு குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு கோரியும், சாலையை செப்பனிடவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வியா ழனன்று (செப்.12) பேரூராட்சி அலுவ லகம் முன்பு காத்திருக்கும் போராட் டம் தொடங்கியது. சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலா ளர் டி.கே.எஸ். மோகன் தலைமை யில் நடைபெற்ற இந்தப் போராட் டத்தில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எம். சந்திரன், சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் க.வெ. ராதாகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து இரவு 9 மணி அளவில் பேரூராட்சி செயல் அலுவ லர் ஜெயக்குமார் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். வீடு களுக்கு 3 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதாகவும், ஓரிரு வாரங்களில் சாலையை சீரமைத்து செப்பனிட்டு தருவதாகவும் உறுதி யளித்தார். இதனையடுத்து போராட் டம் முடிவுக்கு வந்தது.