சென்னை, ஜன.9- மாநில அரசுக்கு எதிராக செயல் படும் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து திமுக - தோழமைக் கட்சிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமது உரையை வாசிக்க தொடங்கியதும், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழர் வாழ்வுரிமை ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த தால் அவரது இருக்கை முன்பு சென்று முழக்கமிட்டனர். பின்னர் இக்கட்சிகளின் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேறி பேரவை வளாகத்தில் இதே கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர். இதேபோல், பாமக உறுப்பினர்களும் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.
ஆளுநர் உரையை ரசித்த எடப்பாடி பழனிசாமி
திமுக தோழமை கட்சிகளும் பாமக உறுப்பினர்களும் ஆளுநர் ரவிக்கு எதி ராக கோஷமிட்டபோது, சட்டப்பேரவை யின் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி யும் அவரது கட்சி உறுப்பினர்களும் ஆளுநர் உரையை மேசை தட்டி வர வேற்றனர். ஆளுநர் தனது உரையை நிறைவு செய்யும் வரையிலும் பேரவையில் இருந்தனர்.