tamilnadu

img

வாரிய குடியிருப்பின் மேல்தளம் இடிந்து விபத்து

சென்னை, ஆக. 28- சீனிவாசபுரம் குடிசைமாற்று வாரிய குடி யிருப்பின் மேல்தளம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் அடிபடவில்லை. சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ளது சீனிவாச புரம். இங்குள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் தரைத்தளம் தவிர்த்து  3 தளங்கள் கொண்டதாக உள்ளன.  சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடு கள் என்பதால் அவை இடிந்து விழும் நிலை யில் உள்ளன. இங்கு 138/19 என்ற இலக்கத்தில் வசிக்கும்  ஜெயலட்சுமி என்பவரது வீடு 3வது தளத்தில்  உள்ளது. 8 மாதங்களுக்கு முன் மேல்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது. அப்போதே குடி சைமாற்று வாரிய செயற்பொறியாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் எந்த வித பழுதுபார்ப்பு பணியையும் மேற்கொள்ள வில்லை. இந்நிலையில் கடந்த 23ந் தேதி மேல்  தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. 27ந் தேதி முழுவதுமாக இடிந்துவிட்டது. அச்சமயம் வீட்டியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. இத னையடுத்து வாரிய குடியிருப்பில் வசிக்கும்  மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். ஒரு  சிலர் குடியிருப்புகளை காலி செய்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகை யில், வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்  படுத்த வேண்டும். தற்காலிகமாக பழுது பார்ப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.