நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ “சந்திர யான் 3” விண்கலத்தை எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஜூலை 14 அன்று நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் திட்டமிட்டபடி பணிகளை செய்து “சந்திரயான் 3” ஆய்வு வெற்றி பெற்றது. இந்நிலையில், 124 நாட்களுக்குப் பிறகு “சந்திரயான் 3” விண்கலத்தை வளிமண்டலத்திற்கு கொண்டு சென்ற ராக்கெட் (கிரையோஜெனிக் என்ஜினின் மேல்பகுதி) புதனன்று மதியம் 2.42மணி அளவில் வடக்கு பசிபிக் கடல்பகுதியில் விழுந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.