சென்னை, மே 16-தேனி மக்களவைத் தொகுதிக்கு திருவள்ளூரிலிருந்து கூடுதலாக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இளங் கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-தேனி தொகுதியில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்கவில்லை. தேர்தல் ஆணையம் தன் னிச்சையாகவே ஆண்டிப் பட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் தொகுதியிலுள்ள வடுகப் பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.ஆனால், இதுபற்றி அறிவிப்பதற்கு முன்பே ரகசியமாக கோவை யிலிருந்து 50 வாக்குப் பதிவு எந்திரங் களை தேனிக்கு கொண்டு சென்றனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகுதான் 2 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்போவதாக சொன் னார்கள். அப்படியே பார்த்தாலும் இரு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவுக்கு 50 எந்திரங்கள் எதற்கு?இந்த நிலையில் திருவள்ளூரிலிருந்து மேலும் 20 வாக்குப்பதிவு எந்திரங் கள், 30 விவிபாட் எந்திரங் களையும் கொண்டு சென் றுள்ளார்கள். இவ்வளவு எந்திரங்களை தேனியில் கொண்டு குவிப்பதற்கு என்ன காரணம்? இதையெல்லாம் பார்க்கும்போது ஏதோ, சதிசெயல் செய்ய திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.தேர்தல் ஒழுங்காக நடந்தால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் எப்படியாவது தில்லு முல்லு நடத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.எத்தனை பெட்டிகளை மாற்றினாலும் அவர் மிகப் பெரிய தோல்வி அடைவார். மக்கள் மத்தியில் கடுமையான கோபமும், ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது. தேனி தொகுதியில் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எங்கள் புகாரை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.