கடலூர், ஜூலை 1- பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் கட லூர் மாவட்டம் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் சட்டப்படியான கூலி 229 ரூபாயை முழுமை யாக வழங்க வேண்டும், நிலு வையில் உள்ள சம்பள பாக்கி வழங்க வேண்டும், கம்மா புரம் ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும், பொன்னேரி, தெற்கு பகுதி மக்களுக்கு சுகாதார வளாகம் காட்டிக் கொடுக்க வேண்டும், அக ரம் கிராமத்திற்கு தெரு விளக்கு, குடிநீர் வசதி செய்துத்தர வேண்டும் என அந்தமனுவில் கூறப் பட்டுள்ளது. வட்ட தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலா ளர் எஸ்.ஜோதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.