tamilnadu

img

பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை: அமைச்சர்

சென்னை:
கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ஆம் தேதியோடு முடிவடைகிறது.

இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி, கோடைக்கால விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் 1 ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதுள்ள சூழலில், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா தொற்று அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை” என்றார்.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை யிலான குழு முடிவு செய்யும். பள்ளி வேலை நாட்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

;