tamilnadu

img

புதிய அனல்மின் நிலையம் ஜனவரி முதல் செயல்படும்

சென்னை,டிச.21- வடசென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின்  நிலையம் வரும் ஜனவரி மாதம் செயல் படத் தயாராக உள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி சராசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர் காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்து, கோடைக் காலத்தில் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உயர்ந்து காணப்படும்.

மின் தேவையை பூர்த்தி செய்ய  மின்வாரியம் தனது சொந்த உற்பத்தி யைத் தவிர, தனியார் காற்றாலை நிறு வனங்கள், ஒன்றிய அரசு மற்றும் தனி யார் நிறுவனங்களிடம் இருந்து கொள் முதல் செய்கிறது.

இந்நிலையில், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, தமிழ்நாடு மின் வாரியம் வடசென்னையில் உள்ள அத்திப்பட்டில் 800 மெகாவாட் திறனில் புதிய அனல் மின் நிலையத்தை கட்டி வருகிறது. ரூ.6,500 கோடி செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் நிலை யத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த அனல் மின் நிலையத்தை திறக்க திட்ட மிடப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொது  முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் அது திறக்கப்படுவதால் அதிக தாமதம் ஆனது. இந்த அனல்மின் நிலை யத்துக்குத் தேவையான நிலக்கரி ஒடிசா  மாநிலம் தால்ச்சர், ஐ.பி.வேலி சுரங்கங்கள் மற்றும் தெலுங்கானா மாநி லம் சிங்கரேனி ஆகிய சுரங்கங்களில் இருந்து கொண்டு வரப்படவுள்ளது.

இவை தவிர, ஒடிசா மாநிலம் மகாநதி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி வழங்குமாறும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து 6 விழுக்காடு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியையும் ஒன்றிய அரசிடமிருந்து மின்வாரியம் பெற்றுள்ளது.

இதன்மூலம், இந்த அனல் மின் நிலையம் முழு அளவில் செயல்படத் தொடங்கும். அத்துடன், இந்த மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் வரும் கோடைக் காலத்தில் மின்தேவையை சிரமமின்றி பூர்த்தி செய்ய முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்த னர்.