வேலூர், ஜூலை 14- குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம், மாத பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர் செங்கொடி சங்கம் (சிஐடியு) கோரியுள்ளது. டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் பேரவைக் கூட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.பாபு தலைமை தாங்கினார். சங்க கொடியை திலகவதி ஏற்றிவைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் வ.அருள்சீனிவாசன் தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.காசி துவக்கிவைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பி.ராமச்சந்தி ரன் ஆண்டறிக்கை வாசி த்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் தா.வெங்கடேசன், விச தாலுக்கா தலைவர் நிலவு குப்புசாமி, ஏ.குப்பு, நிர்வாகிகள் ஏ.சீனிவா சன் ஆகியோர் வாழ்த்தி ப்பேசினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பர சுராமன் நிறைவுரையாற்றி னார். ஒப்பந்த முறையை ஒழித்து, பிஎப்,இஎஸ்ஐ போனஸ் உள்ளிட்ட சட்ட சலுகைகளை வழங்க வேண்டும், போனஸ், ஊதியத் தொகை, சீருடை, மிகை நேர வேலைக்கான இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், ஜாப் ஒர்க், பீஸ் ரேட் என குறைந்த கூலி கொடுப்பதை தொழிலாளர் ஆய்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
தலைவராக ஏ.பாபு, பொதுச் செயலாளராக எம்.பி.ராமச்சந்திரன், பொரு ளாளராக எம்.குழந்தைவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.