சென்னை புத்தகக் கண்காட்சி ‘புக்ஸ் ஃபார் சில்ட்ரன்’ அரங்கில் ஞாயிறன்று (ஜன.7) மகிழ் பதின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் பதிப்பு ஆசிரியர் அப்பணசாமி வெளியிட இளம் எழுத்தாளர் ரமணி பெற்றுக் கொண்டார். தீக்கதிர் கோவை பதிப்பு பொது மேலாளர், எஸ்.ஏ.மாணிக்கம், பாரதி புத்தகாலயத்தின் மேலாளர் நாகராஜன்,நூலின் ஆசிரியர்கள் விழியன் சக்தி, செண்பகவல்லி, பத்திரிகையாளர் நாகப்பன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.