இந்தியாவின் முதல் சர்வதேச விவாதப்போட்டியான மினிவோர்ல்டு சென்னை 2019 சமீபத்தில் நடந்துமுடிந்தது. இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது.இந்தியன் பள்ளி விவாத சொசைட்டி (ஐஎஸ்டிஎஸ்) சார்பில் இந்த சர்வதேச விவாதப்போட்டி முதல்முறையாக சென்னையில் நடத்தப்பட்டது.போட்டியை சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவன தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, சிபிஎஸ்இ சென்னை மண்டல அலுவலர் கே.சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஐஎஸ்டிஎஸ் தலைவர் நிர்மலா ராஜா, ராம்கோ குழுமங்களின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமன்ராஜா உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.