tamilnadu

என்கவுன்டரில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம்

சென்னை,மார்ச் 11- கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்தி பன் கொடூரமாக வெட்டி கொல்லப் பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ், முத்து சரவணன் ஆகியோர், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பதுங்கியிருந்தபோது, காவல் துறை பிடிக்க முயன்றதாகவும், தங்களை தாக்கிவிட்டு தப்பித்து ஓடியதால் சுட்டுக் கொல்லப்பட்ட தாகவும் பூந்தமல்லி காவல்துறை யினர் தெரிவித்தனர்.

மேலும், தப்பிக்க முயன்றதாக கூறும் காவல்துறையின் குற்றச் சாட்டு தவறு எனக் கூறி, என்கவுன்டர் சம்பவத்தில் சந்தேகம் உள்ளதால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந் தராஜன் சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு திங்க ளன்று  (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக சிபிசி ஐடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முதலில் சிபிசிஐடி விசாரணை நடத்தட்டும், அதில் திருப்தி இல்லை என்றால், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம் என நீதிபதிஅறிவுறுத்தி, சிபிஐ விசாரணை கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.