tamilnadu

ராமர் கோவில் திறப்பு வாக்கு சேகரிக்கும் விழாவே: கி.வீரமணி அறிக்கை

சென்னை, ஜன.1- “ராமர் கோவில்’’என்பது வாக்கு சேகரிக்கும் - ஹிந்து ராஷ்டிர விழா என்றும் இதன் மூலம் இந்திய அரசின் அடிப்படை கட்டமைப்பு தகர்க்கப்பட்டு விட்டது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில்,“இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவங்களும், விழுமியங்களையும் விடை கொடுத்தனுப்பியது பாஜக ஆட்சி. இந்த விந்தை ஆட்சியின் வினை யாடல்களுக்கும், அனைத்து முற்போக்கு உலகத்தவரின் முகம்  சுளிப்பு க்கும், முழு விமர்சனங்களுக் கும் இடம் தந்த 2023 ஆம் ஆண்டு  முடிவுக்கு வந்தது” என்று கூறி யுள்ளார்.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்கியது. இவ்வாண்டின் இன்னும்  மூன்று, நான்கு மாதங்களில் ஒன்றிய  அரசுக்கான பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இவ்வாண்டு  மிக முக்கியமான, மக்கள் விழிப்புணர்வின் தேவை வலியுறுத்தும்  ஆண்டாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.  

நமது அரசமைப்புச் சட்டத்தின் சட்டத்தின் முகப்புரையில் உள்ள இறை யாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு என்பனவற்றின் முக்கியத்துவம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாக காணாமல் போய்க் கொண்டுள்ளது.

அரசின் அமைப்புகள் வெளிப் படைத்தன்மைக்கான பதில், ‘தோலிருக்க, சுளை முழுங்கும்’ வகை யில், மக்கள் பிரதிநிதிகளின் குரல் - எதிர்க்கட்சியினர் குரல் கேட்கப்பட முடியாத தாக்கப்பட்டு, வரலாறு காணாத வகையில் 146 உறுப்பினர்கள் தொடர் முழுவதும் (சிலர் அடுத்தத் தொடர் வரையிலும்) ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட நிலையில், 5 சட்டங்கள் - மிக முக்கிய குற்றவியல் சட்டங்கள் உள்பட, சம்பந்தமான மசோதாக்கள் வெறும் ஆளுங்கட்சியினர் மட்டுமே ஓட்டளித்து நிறைவேற்றப்பட்ட விசித்திரம் நடந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பறிபோகும் மாநில உரிமைகள்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன பிரச்சனையிலும் சரி, தேர்தல் ஆணை யத்தின் உறுப்பினர்கள் போன்ற (ஜன நாயக காப்புப் பிரச்சனை) உறுப்பினர் கள் நியமன முறையில், அதன் ஆணை களுக்கு நேர் எதிர் நிலைப்பாட்டை பாஜக ஆட்சி எடுத்து, தானடித்த மூப்பாகவே நடந்து கொண்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் மீது மட்டும் பாயும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற, ஊடகங்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூண், கலகலத்துப் போகும் அளவுக்கு, அச்சுறுத்தப்பட்டு, அவர்களின் எண்ணப்படி நடக்கும் நிலை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அரசியல் ஏவுகணை களாக்கி, அவ்வாட்சிகளை முறைப்படி  நடத்தவிடாமல் முடக்கும் விந்தை என்றும் கூறியிருக்கிறார்.

ராமர் கோவில் திறப்பின் பின்னணி என்ன?
இப்போது, ஹிந்துராஷ்டிரக் கொடியை ஏற்றுவோம் என்று உலகிற்கு காட்டிடவும், வாக்குகளை திரட்டவும், அதிருப்தியில் இருக்கும் மக்களை மயக்க ராமர் கோவில்.

எனவே, தமிழ்நாடு போல், ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச்  செய்ய பொறுப்புடனும், கவலையுட னும் கூடிய ஓர் ஆக்கப்பூர்வ செயல்முறைத் திட்டம் - விட்டுக் கொடுத்து, வெற்றி வாய்ப்புகளை ஒரே இலக்காகக் கொண்டு - வேட் பாளர்களை, பாஜகவுக்கு எதிராக நிறுத்தும் திட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி உருவாக்குவது அவசரம், அவசியம் என்றும் வீரமணி தெரிவித்திருக்கிறார்.