சென்னை:
வேளாண் சட்ட விவகாரம் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திங்களன்று (அக்.12) தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டங்களில் வேளாண் சட்டங்கள், பொதுத் துறைகள் தனியாருக்கு விற் பனை, தொழிலாளர் நலச்சட்டங் கள் பறிப்பு, நீட் தேர்வு, மாநில உரிமைகள் பறிப்பு போன்றவற்றை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.சென்னை கிண்டியில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங் களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் போராடி வருகின்றனர். மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் பாஜக அரசு அந்த சட்டங் களை நியாயப்படுத்தி பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் எடிப் பாடி பழனிசாமியும் அந்த சட்டங்களை ஆதரித்து பேசி வருகிறார். தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி, எந்த முகத்தைக் கொண்டு வாக்கு கேட்கப் போகிறார்? முதலமைச்சர் அந்த சட்டங்களை ஆதரிப்பது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது.விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பை வைத்துக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் சென்று விற்கலாம் என்று கூறுவது நடைமுறை சாத்தியமற்றது. கார்ப்பரேட் கொள்ளையடிக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள் ளது.வியாபாரிகளும் விவசாயிகளுக்கும் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஒருபோதும் விவசாயிகளுக்கு பயனளிக்காது. மத்திய அரசை முந்திக்கொண்டு மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. இதன்தாக்கம் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக் கும். விவசாயிகள் பாஜக, அதிமுகவிற்கு ஓட்டு போடமாட்டார் கள்.திமுக கூட்டணி உடைந்துவிடும் என்று சிலர் கனவு காண் கின்றனர். அது அபரிமிதமான கனவு. சர்க்கரை என்று பேப்பரில் எழுதி நக்குகிறேன் என்பவர்களை எங்களால் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.