tamilnadu

விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலத்திற்கு வருகிறது

சென்னை, ஜூன் 21- கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. விஜயகாந்தின் சொத்து ஏல அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  நாளிதழில் வெளியிட்டுள்ளது. அதில், கடன் பாக்கியை செலுத்தாததால் சென்னை சாலிகிரா மத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26 ல் ஏலத்தில் விடப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.   இதேபோல் மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியி யல் கல்லூரியும் ஏலத்திற்கு வருகிறது. சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி  நிலம், வணிக கட்டிடமும் ஏலத்துக்கு விடப்படு கிறது.  ரூ.5.52 கோடி கடன் பாக்கிக்காக விஜய காந்தின் வீடு, கல்லூரியை ஏலத்திற்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. கடன்  பாக்கி, வட்டி, இதர செலவுகளை வசூலிக்க விஜய காந்த் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக அவ் வங்கி யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா சொத்துக்கள் ஏலம்போகாமல் பார்த்துக்கொள்வோம் என்றார்.

;