tamilnadu

“தமிழ்நாடு அறிவுசார் நகரம்” அமைப்பதற்கான பணிகள் துவக்கம்

சென்னை, நவ. 4- திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையத்தையொட்டி, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு  அறிவுசார் நகரத்தை அமைப்ப தற்கான ஆரம்பக்கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

கல்வியை மையமாகக் கொண்டிருக்கும் உலகத் தரத்திலான  ஒரு அறிவுச் சூழல் அமைப்பாக “தமிழ்நாடு அறிவுசார் நகரை” உரு வாக்க தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை யொட்டி 1,703 ஏக்கர் பரப்பளவில் சுமார் 200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம், இந்த நகருக்கான விரிவான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஆலோசகரை நியமிப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 19ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்றும் டிட்கோ தெரிவித்துள்ளது.