tamilnadu

img

“மகிழினி IFS “

பள்ளி மாணவி வனத்துறை அதிகாரியாக ஆகிறார் என்பதே இந்த நூலின் கரு.

இந்த நூல் வாசிக்கும் குழந்தைகளுக்கு வனத்தைப் பற்றியும், வனத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள் குறித் தும், குறிப்பாக வனத்தில் வசிக்கும் விலங்குகள் குறித்தும் விரிவாக அறிந்து கொள்ள முடியும். 

அதுபோன்று மலைவாழ் மக்கள் கடைப்பிடித்து வரும்  பழக்க வழக்கங்கள் உணவு முறைகள் பற்றி நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் வனப்பகுதிக ளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மீதும்,  அங்கு அலைந்து திரியும் வன விலங்குகள் மீதும் பேரன்பு கொள்வார்கள்.

 குழந்தைகளுக்கு வனப்பகுதியில் நேரடியாக பயணித்த அனுபவம் இந்நூலை படிக்கும் போது கிடைக்கும் என்பது உறுதி.

நூலாசிரியர் : ஈரோடு சர்மிளா
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் 
48 பக்கங்கள், நூலின் விலை : ரூ.60 
தொடர்பு எண்: 044 24332924