tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் வாக்குவாதம்!

சென்னை, மார்ச் 6- எல்லை தாண்டி மீன்பிடித்  ததாக இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட  20 மீனவர்கள் புதனன்று சென்னை விமான நிலையம்  வந்தனர். அங்கே அவர் களுக்கு பாஜகவினர் சால்வை அணிவிக்க முயன்ற  நிலையில், அதனை ஏற்க  மறுத்து, பாஜகவினரை மீன வர்கள் துரத்தியடித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் பிப்ரவரி 4 அன்று கச்  சத்தீவு, நெடுந்தீவு பகுதி களில் எல்லை தாண்டி மீன்  பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்த னர். பின்னர் அவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களை விடு விக்கக்கோரி பல்வேறு தரப்பி னர் கோரிக்கை வைத்தனர். இராமேஸ்வரத்தில் மீன வர்கள் பல்வேறு போராட்டங் களையும் நடத்தினர்.   நீண்ட போராட்டத்திற்குப்  பிறகு, 23 மீனவர்களில் 20 பேரை மட்டும் இலங்கை விடு தலை செய்தது.

அவ்வாறு விடு விக்கப்பட்ட 20 பேரும் கொழும்புவில் இருந்து விமா னம் மூலம் புதனன்று சென்னை  வந்தனர். இவர்களை வரவேற்க பாஜக மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி உள்  ளிட்ட பாஜகவினர் சென்னை  விமான நிலையம் வந்தனர்.  பின்னர் அவர்கள் மீனவர் களுக்கு சால்வை போட முயன்றனர்.

அப்போது, அதனை மறுத்த மீனவர்கள்,  “எங்களுடன் மீன்பிடிக்க வந்த  மேலும் மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக் கப்பட்டுள்ளது. எனவே அவர்  களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்க ளுக்கு இந்த சால்வை, உண வெல்லாம் வேண்டாம், நீதி தான் வேண்டும்” என பாஜக-வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு துரத்தியடித்தனர்.

பின்னர் தமிழக மீன்வளத்  துறை அதிகாரிகள் நாக ராஜன், ஜேசுராஜ் ஆகியோர் 20 மீனவர்களையும் அரசு செலவில் சொந்த ஊரான இராமேஸ்வரத்திற்கு வாக னங்களில் அழைத்துச் சென்ற னர்.