tamilnadu

பத்திரம் காணவில்லை ,காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம். பார்த்தசாரதி நகர். பலராம் கார்டன், எண்.3/223 என்னும் விலாசத்தில் வசித்து வரும் திரு. கோபிநாத் அவர்கள் மனைவி சுசரிதா ஆகிய நான் சத்தியபிராமணத்தின் பேரில் கூறுவது யாதெனில்,நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறேன்.காலம் சென்ற என் தந்தை வேணுகோபால் ரெட்டியார் அவர்களுக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம் வளையபுத்தூர் கிராமத்தில் பட்டா எண்.218, புன்செய் சர்வே எண்கள் 159/1A, 161/1A, 161/2A, 161/2B, 162ல் மொத்த விஸ்தீரணம் ஹெக்டேர் 1-13.50ஏர்ஸ் நிலங்கள் மதுராந்தகம் சார்பதிவகத்தில் பாகப்பிரிவினை பத்திரம் ஆவண எண் 701/1960 முன்னிலைக்கு பெற்ற சொத்தினை என் தகப்பனார் ஆண்டு அனுபவித்து 27.07.2015 அன்று இறந்துவிட்டர். அவருக்கு சுசரிதா கோபிநாத்ஆகிய நான் மட்டுமே வாரிசு ஆவேன், வாரிசு சான்று பெற்றுள்ளேன்.20.03.2019 அன்று காலை 10.00 மணியளவில் மேற்படி அசல் பாகப்பிரிவினை பத்திரம் ஆவணங்களை நான் மதுராந்தகத்தில் வில்லங்கச் சான்று பெற வேண்டி வந்த போது மதுராந்தகம் பழைய தாலுக்கா அலுவலக சாலையில் அசல் ஆவணங்களை வைத்திருந்த கவருடன் கவனமறதியாக தொலைத்துவிட்டேன். நான் பலமுறை வந்தவழியில் தேடியும் மேற்படி அசல் ஆவணங்கள் கிடைக்கவில்லை. என இதன் மூலம் உறுதியளிக்கிறேன். எவரேனும்எடுத்து வைத்திருந்தால் என்னிடம் தருவார்கள் என்று இது நாள் வரை காத்திருந்தும் பயனில்லை. ஆகவே மதுராந்தகம் காவல் நிலையத்தில் மேற்படி அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டது உண்மை என சான்று பெறுவதற்காக நான் இந்த பிரமாண வாக்குமூலத்தை அளிக்கிறேன்.மேற்படி சங்கதிகள் அனைத்தும் உண்மை என சத்திய பிரமாணத்தின் பேரில் உறுதி அளிக்கிறேன் மேற்படிசங்கதிகள் தவறானவை என தெரியவந்தால் என் மீது எடுக்கப்படும் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.


இப்படிக்கு

சுசரிதா

க/பெ. கோபிநாத்

எண்.3/223 பலராம் கார்டன், 

பார்த்தசாரதி நகர், மணப்பாக்கம் கிராமம். 

திருப்பெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.


;