tamilnadu

img

காஞ்சிபுரம் மற்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். மின் திட்ட தலைவர் டி.சிறீதர் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், சிபிஎம் நகரச் செயலாளர் சி.சங்கர், தொமுச நிர்வாகி இளங்கோவன், சேகர், திமுக நகரச் செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல பொதுச் செயலாளர் என்.நந்தகோபால், மாவட்டப் பொருளாளர் ஆர். மதுசூதனன் உட்பட பலர் பேசினர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வெள்ளியன்று (ஏப்.12) விருகம்பாக்கம் பகுதி 131, 137, 138 ஆகிய வட்டங்களில் வாக்கு சேகரித்தார். திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், பகுதிச் செயலாளர் சி.செங்கல்வராயன் உள்ளிட்டு தோழமைக்கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி வெள்ளியன்று (ஏப். 12) திருவிக நகர் 70, 71, 74,75, 76 வட்டங்களில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், நிர்வாகிகள் விஜயலட்சுமி, பூங்குழலி, பா.தேவி (எ) தேவகி, பி.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சதீஷ், பாலாஜி, பாலமுருகன், ஏக், மோகன், சுப்பிரமணி, ஜெசிந்தாமேரி, மோகன், திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம்கவி , தமிழ்வேந்தன், வெங்கடேசன், சாமிக்கண்ணு, சின்னதுரை, சசி,புஷ்பராஜ், வேதா ஆகியோர் பங்கேற்றனர்.

;