சென்னை, பிப். 24 - திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில், மக்களவைத் தேர்தலுக்கான தொகு திப் பங்கீடு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. சனிக்கிழமையன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை யின் முடிவில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, எந்த தொகுதிகள் என்பதும் அறிவிக் கப்பட்டுள்ளது. இதன்படி முஸ்லீம் லீக்கிற்கு இராமநாதபுரம் மக்களவைத் தொகு தியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள், தங்கள் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பதையே அறிவிக்க முடியாத நிலையில், திமுக அணியில் 2 வாரங்களுக்கு முன்பு, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையே துவங்கி நடைபெற்று வந்தது. முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முடிந்திருந்த நிலையில், சனிக்கிழ மையன்று (பிப்.24) மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங் கின.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் அமைச் சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் க. பொன்முடி, மாநிலங்க ளவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் பேச்சு நடத்தினர்.
முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகமது அபுபக்கர், மாநில பொருளா ளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், தேசியச் செயலாளர் எச். அப்துல் பாசித், மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ, துணை பொதுச் செயலாளர் கள் சக்தி நடராஜன், சின்ராஜ், நித்தி யானந்தம், இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, கொள்கை பரப்புச் செயலாளர் அசோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மதிமுக பேச்சுவார்த்தை மதிமுக சார்பில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன், தேர்தல் பணிச் செய லாளர் வி.சேஷன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடி வில், முஸ்லிம் லீக் கட்சிக்கு இராம நாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த 2 தொகுதிகளும் 2019-இல் முஸ்லீம் லீக், கொமதேக போட்டியிட்டு வென்ற தொகுதிகள் ஆகும். தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
இராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளரும் அறிவிப்பு
தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு, முஸ்லீம் லீக் கட்சியா னது இராமநாதபுரத்தில் தற்போ தைய எம்.பி. நவாஸ் கனியே மீண்டும் வேட்பாளராக போட்டியிடுவார் என்று வேட்பாளர் பெயரையும் அறி வித்துள்ளது.