tamilnadu

img

சிபிஐ(எம்) - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு சந்திப்பு

இந்திய - வியட்நாம் உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்காக, தில்லியில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இடையே கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, நிலோத்பல் பாசு மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக் குழு உறுப்பினரும், வின் லாங் மாகாணத்தின் முதலமைச்சருமான புய் வான் நிகிம் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.