பழனி, நவ. 29- பழனி அருகே கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓலைச்சுவடிகள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி இதனை மீட்டெடுத்து கணி யர் ஞானசேகரன் உதவியு டன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஓலைச்சுவடி குறித்து இருவரும் கூறிய தாவது: வீட்டின் பரண் மீது இருந்த தாகவும் அதனை ஆய்வு செய்த போது அருணாச்சல புராணத்தின் சுவடி பிரதி என்பது தெரியவந்தது. அரு ணாச்சல புராணம் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலரால் இயற் றப்பட்டது. அந்த புராணத் தின் மூலமும் உரையும் கொண்ட பிரதிகள் தான் இவை. கலையம்புத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து பண்டா ரத்தின் மகன் சிதம்பரம் பண்டாரம் என்பவர் அருணாச்சல புராணம் தனக்கு வேண்டும் என்று எழுதியதாக குறிப்பிடுகிறார். தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் இந்த ஓலைச் சுவடியை எழுதி யிருப்பது தெரியவருகிறது 21 பாடல்களில் 3 கிரந்தங்க ளில் (வடமொழி) சொல்லப் பட்டதை தமிழில் எழுதிய தாக சிதம்பரம் பண்டாரம் குறிப்பிடுகிறார். மூல அரு ணாச்சல புராணத்திற்கும் இந்த ஓலைச்சுவடி பிர திக்கும் மிகுந்த பாட பேதங் கள் காணப்படுகின்றன. கம்ப ராமாயணம் எழுதும் போது கம்பருக்கு சடையப்ப வள்ளல் நூல் எழுத உதவி செய்ததை நாம் அறிவோம். அது போல இந்த அருணாச் சல புராணத்தை படி எடுக்கும் போது அப்பகுதி மக்கள் உதவி செய்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது என்று நாராயணமூர்த்தி தெரிவித்தார்.