tamilnadu

பாழடைந்த பொது கிணறை தூர் வரும் பணி

வேலூர், ஆக.26- வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம் தாஜ்புரா ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் பாழடைந்த பொதுக் கிணற்றை தந்தை பெரியார் குடியிருப்போர் நலச் சங் கத்தினர் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஆற்காடு வட்டத்திற் குட்பட்ட, தந்தை பெரியார் நகரில், ராகவேந்திரா நகர், மருதமலை நகர், பெரியார் நகர் விரிவு ஆகிய குடி யிருப்பு பகுதியில் சுமார் 200  க்கும் மேற்பட்ட  வீடுகள் உள்ளன. இப் பகுதியில் உள்ள 80 ஆண்டுகள் பழை மையான கிணறு உள்ளது.  கிணற்றில் குளித்தும், துணி துவைத்தும் வந்தார்கள்.  இக்கிணறு கால போக்கில் பயன் பாட்டிற்கு இல்லாமல் பாழ் அடைந்து, பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் நிறைந்து  காணப்படுகிறது. இந் நிலையில், குடி யிருப்பு பகுதியில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.இதனால், பாடம் கற்றுக் கொண்ட குடியிருப்பு வாழ்  பொது மக்கள், குடிநீர் பற்றாக்குறையை போக்க  பாழடைந்த பொதுக் கிணற்றை தூர் வார  திட்டமிட்டனர்.அதன்  அடிப்படையில் ‘தந்தை பெரியார் குடியிருப்போர் நலச்சங்கள்’ என்ற பெயரில் அமைப்பு உருவாக்கி பதிவு செய்துள்ளனர். இங்கு முறையான கழிவு நீர் வடிகால் இல்லை, இத னால் இப் பகுதியில் உள்ள இரண்டு பொதுக்கிணறுகள், குப்பைகளும் நெகிழி பொருட்களால் நிறைந்து கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. மேற்கண்ட கோரிக்கையை வலியுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாத்மா காந்தி பிறந்த நாளில் நடந்த கிராம சபைக் கூட்டத் தில் கோரிக்கை மனு அளித் தும் அரசு நிர்வாகம் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை, இதனால் வேதனை யடைந்தனர். “குடிநீர் பிரச்சனை தீர்க்க வும், சுகாதார சீர் கேடான பொது கிணறுகளை தூர்  வார நலச்சங்கம் திட்டமிட்டு, குடியிருப்பு பொது மக்க ளிடம் நன்கொடையாக ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் வசூலித்து. கிணற்றை தூர்  வாறும் பணி மிகவும் வேக மாக நடந்து வருகிறது.

தமி ழக அரசு அறிவித்துள்ள “நீர் நிலைகளை பாதுகாப்பு” என்ற திட்டத்தின் கீழ் அரசு  ஒத்துழைப்புடன் பொதுக் கிணற்றை தூர்வாரி, குடிநீர் பிரச்சனை தீர்க்கவும், கழிவு நீர் வடிகால்களை ஏற்படுத்த வும் குடியிருப்போர் மிகவும் ஆர்வமாக உள்ளனர்”, என  குடியிருப்போர் நலச் சங்க  ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் கூறினார்.  இது பற்றி நலச்சங்க செயலாளர் இரா.இராமசாமி  கூறுகையில், “தமிழ அரசு பொது மக்களின் முயற்சிக்கு ஆதரவாக, கிணற்றிலிறுந்து எடுக்கப்படும் கழிவுகளை தரம் பிரித்து குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பூங்கா அமைக்க அரசும், ஊராட்சி நிர்வாகமும் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.