tamilnadu

img

அரசு - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே பிப். 7-இல் மீண்டும் பேச்சு!

சென்னை, ஜன. 19 - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள் இடையிலான பேச்சுவார்த்தை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழி லாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி., எச்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கி யிருந்தனர். இதுதொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9, 10 தேதி களில் போக்குவரத்துத் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்றும், பொதுமக்கள் நலன் கருதியும் ஜனவரி 19 வரை வேலை நிறுத்தத்தை நிபந்தனையுடன் ஒத்திவைப்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜன. 19) 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை க்கு வரும்படி போக்குவரத்து தொழிற் சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் போக்குவரத்துத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் அ.சவுந்தரராசன், ஆறுமுக நயி னார், தயானந்தம், கனகராஜ் (சிஐ டியு), கமலக்கண்ணன் (ஏடிபி), வெங்க டேசன் (எம்எல்எப்), திருமலைச்சாமி (பிடிஎஸ்எப்) ஆறுமுகம் (ஏஐடியுசி) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழ கங்களின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப்பின் சிஐடியு  தலைவர் அ. சவுந்தரராசன் செய்தியா ளர்களிடம் பேசினார். அப்போது, “பிப்ர வரி 6 அன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு  வரவுள்ளதால், அதனைத் தொடர்ந்து,  பிப்ரவரி 7 அன்று தொழிற்சங்கத்தின ருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடு பட்ட தொழிலாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் கூட்டத்தில் உறுதியளிக்கப் பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்ற மும் இல்லாததால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஜனவரி 30 அன்று மாநிலம் முழுவதும் வாயிற்கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் பழைய நிலையிலேயே இருக்கிறார்கள். அதே நிலை நீடித்தால் பெரிய சிக்க லில்தான் போய் முடியும்” என்றும் சவுந்தரராசன் குறிப்பிட்டார்.