tamilnadu

img

தென்சென்னை மக்களின் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவேன்: திமுக எம்பி

சென்னை,மே 25-தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக முன்னாள் தலைவர்  கலைஞர்  நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தென் சென்னை தொகுதி மக்கள் திமுக மீதும், தலைவர் ஸ்டாலின் மீதும், என்னுடைய வாக்குறுதிகள் மீதும், மிகப்பெரிய நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். என்றைக்கும் திமுக அவர்களுக்காக நிற்கும். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

எம்.பி-யான 5 எழுத்தாளர்கள்
நாடாளுமன்றம் முழுவதும் தமிழக மக்களின் உரிமைக்கான குரல்களுக்காக ஒலிக்கும், எழுத்தாளர்கள் அனைவரும் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல், தார்மிக ரீதியாக தாங்கள் கொண்ட கொள்கைக்கு குறிப்பாக திமுக மற்றும் அதனுடைய கூட்டணி சார்ந்த கட்சிகளின் கொள்கைக்கும், தமிழக மக்களுடைய நலனுக்கும், உரிமைக்கும் மிக சரியாக குரல் கொடுப்பார்கள். எழுத்திலே இதுகாரும் பதிய வைத்ததை நாடாளுமன்றத்தில் கூடுதல் அழுத்தத்துடன் உரிமையோடு குரல் கொடுப் பார்கள் என்றார் அவர்.

;