tamilnadu

img

தூய்மையான குடிநீருக்கான தேவையும் சந்தையும் அதிகரிப்பு

சென்னை, ஜூன் 14- தூய்மையான குடி நீருக்கான தேவையும் சந்தை யும் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக குளிர் சாதனங்கள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள் உற்பத்தி யில் ஈடுபட்டுள்ள புளுஸ்டார் நிறுவன நிர்வாக இயக்குனர் தியாகராஜன் கூறியுள்ளார். நோய் எதிர்ப்பு சந்தி சார்ந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பான்களை 34 மாடல்களில்   புளுஸ்டார் தயாரித்துள்ளது. இதனை சென்னையில் அறிமுகம் செய்து பேசிய அவர், நீரின் தரம் குறைந்து வருவதாலும் நீரினால் பரவும் நோய் அதி கரிப்பினாலும், தூய்மை யான குடிநீருக்கான சந்தை உயர்ந்து வருகிறது என்றார். குறிப்பிடத்தக்க அளவு கரைந்து விடும் அசுத்தங்கள் நிறைந்துள்ள நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக மக்கள் சார்ந்திருக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது என்றார். தண்ணீரை அத்தியாவ சிய கனிமங்களுடன் செறி வூட்டக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பான்களை தாங்கள் தயாரித்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார். வீடுகளுக்கான ரகங்களின் விலை ரூ.7,900 முதல் தொடங்குகிறது.   தண்ணீர் சுத்திகரிப்பு சாதனத்தின்  விற்பனை மற்றும் சேவை செயல்பாடுகளை  அறை குளிர்சாதன விற்பனை மற்றும் சேவை  பணியாளர்க ளோடு ஒருங்கிணைத்துள்ள தாகவும் அவர் கூறினார்.