tamilnadu

img

நாடு தழுவிய தேர்தல் முடிவுகளில் பாஜக செல்வாக்கு சரிவு தமிழகத்தில் அதிகார பலம் வென்றுள்ளது திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு சிபிஎம் நன்றி

சென்னை, அக். 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: விக்கிரவாண்டி, நாங்குநேரி  தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி 2021ல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத்தேர்தலுக்கான முன்னோட்டம் என முதலமைச்சர் கூறியிருப்பது  எதார்த்தத்திற்கு பொருத்தமற்றதாகும். இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதும், அடுத்து நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அதே கட்சி படுதோல்வி அடைவதும் தமிழக தேர்தல் வரலாற்றில் வழக்கமான ஒன்றே. ஆகவே, முதல்வரின் கூற்றை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இந்த இடைத்தேர்தலில்  அதிமுக கூட்டணியின் அதிகாரம், ஆட்சி மற்றும் பண பலம் வெற்றி பெற்றுள்ளது என்பதே நிதர்சன மான உண்மையாகும். இதற்கெல்லாம் ஆட்படா மல் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய கூட்டணி கட்சி நிர்வாகி களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் பல மாநிலங் களில் நடைபெற்ற இடைத்தேர்த ல்களிலும் மகாராஷ்டிரா, ஹரி யானா மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலிலும் மோடி தலைமை யிலான பாஜக கூட்டணியின்  செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் தனது ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 5 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.  ஒப்பு நோக்கில்  கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பெரும் பின்னடைவை இத்தேர்தலில் பாஜக சந்தித்துள்ளது.   மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பாஜக கூட்டணி கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வருவதின் தொடக்கமே  இத்தேர்தல் முடிவுகள் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

;