tamilnadu

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் அறிவிப்பு

சென்னை, நவ.16- 2023-24 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1  மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை வெளியிட்டார்.

இதன்படி 10-ஆம் வகுப்புகளுக்கு 2024 மார்ச் 26 துவங்கி  ஏப்ரல் 8 வரையும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு மார்ச் 4 துவங்கி  25 வரையும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு மார்ச் 1 துவங்கி 22 வரை யும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்திற்கான தேர்வு 26.03.2024  அன்றும், ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு 28.03.2024 அன்றும் நடைபெறுகின்றன. கணிதத் தேர்வு 01.04.2024, அறி வியல் பாடத் தேர்வு 04.04.2024, விருப்பமொழித் தேர்வு 6.4.2023, சமூக அறிவியல் பாடத் தேர்வு 08.04.2024 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை
மொழிப்பாடம் தேர்வு 01.03.2024 அன்றும், ஆங்கிலத் தேர்வு 05.03.2024 அன்றும் நடைபெறும். கணினி அறிவியல்,  கணினி பயன்பாடுகள், அட்வான்ஸ்டு தமிழ் உயிரி- அறிவியல், புள்ளியியல், அடிப்படை மின் பொறியியல்  அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில் முறை) ஆகிய தேர்வுகள் 08.03.2024 அன்று நடைபெறும். 

வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் தேர்வு கள் 11.03.2024 அன்றும், இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பத் தேர்வுகள் 15.03.2024 அன்றும்,  கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும்  உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உண வுச்சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், செவிலியர்  (பொது) 19.03.2024 தேதியிலும், உயிரியல், தாவரவியல், வர லாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், பேஸிக்  எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறி யியல், பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக்  மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி,  ஆபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் தேர்வு கள் 22.03.2024 அன்றும் நடைபெற உள்ளன.

செய்முறைத்தேர்வுகள்
பிளஸ் 1 வகுப்புகளுக்கு பிப்ரவரி 19 அன்றும், பிளஸ் 2  வகுப்புக்கு பிப்ரவரி 12 அன்றும், 10-ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 23 அன்றும் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன.

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்
பிளஸ் 2 தேர்வு முடிவு மே 6-ஆம் தேதியும், பிளஸ் 1 தேர்வு  முடிவு மே 14 அன்றும் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10  அன்றும் வெளியிடப்பட உள்ளன.

மக்களவைத் தேர்தல், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டும், அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகுமே பொதுத்தேர்வுக்கான தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.