சென்னை, பிப். 12 - பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16 அன்று தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணைக்குப் பின் இந்த வழக்கில், ராஜேஸ் தாஸிற்கான 3 சிறைத்தண்டனையை உறுதிசெய்து, நீதிபதி பூர்ணிமா தீர்ப்பளித்துள்ளார். எனினும், மேல்முறை யீட்டிற்காக அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கி, ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.