சென்னை,மார்ச் 16- ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளை நேரடியாக காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
முதல்வரின் முகவரி துறையின் கீழ் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத் திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமை திட்டமான “நீங்களும் நலமா” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, மார்ச் 16 அன்று காலையில் தமிழ்நாடு முதல மைச்சர் முகாம் அலுவலகத்தில் இருந்து பல்வேறு பயனாளிகளை நேரடியாக காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அவர்களது பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்கள்.
அப்போது, அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மதுரை, தெப்பக்குளம் சி. விஜய் ஆனந்த், “இத்திட்டத்தின் மூலம் பெற்ற நன்மைகள் குறித்து வினவினார்.
மேலும், எவ்வித தடங்கலுமின்றி விரைவாக ரூ. 5 கோடி வங்கிக் கடன் பெற்று, அதன் மூலம் மருத்துவ உப கரணங்கள் கொள்முதல் செய்துள்ள தாகவும் கூறினார்.
அடுத்த, மகளிர் சுய உதவிக் குழுவின் கீழ் பயன் பெற்ற திருக்கோவிலூர் வி.பானுப்பிரியா பேசுகையில், “முத்துமாரியம்மன் மகளிர் குழுவில் உறுப்பினராக உள்ள தாகவும், வங்கியில் இருந்து கிடைத்த கடன் தொகையை கொண்டு தனது அரிசி கடையை விரிவாக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்லூரி மாணவி நன்றி!
சென்னை, வேப்பேரி ஆதிதிரா விடர் நல விடுதியில் தங்கி பயின்று வரும் திருவண்ணாமலை மாவட்டம், வற்றாபுத்துர் கிராமத்தைச் சேர்ந்த எஸ். பிரியதர்ஷினி, தான் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரு வதாகவும், இவ்விடுதியில் தங்க ளுக்கு தேவையான அனைத்து வசதி களும் வழங்கி உள்ளதாகவும் கூறி னார். மேலும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற்று வருவதாகவும் அதற்கு முதல மைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி
“அரியலூர் மாவட்டம், கோவிந்த புதூரைச் சேர்ந்த ராதிகா, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதந் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை பெற்று வருவதாகவும் அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரி வித்ததுடன், ரத்த புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ள தனது மகனுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு முதலமைச்சர், அவரது மகன் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
பண்ருட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ப்ரித்தா, தனக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் வீட்டிற்கே வந்து, அனைத்து பரிசோதனைகளும் மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதாகவும், தற்போது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதல்வ ரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.