சென்னை, டிச.7-
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் பன்னாட்டு பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.400 கோடியில் கட்டப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
தனியார் ஆம்னி பேருந்துக ளும் தற்போது கிளாம்பாக்கத் தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருவ தால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் எதுவும் இல்லை.
இதனால், ஆம்னி பேருந்து உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்று, வண்டலூர் வெளிவட்டச் சாலை முடிச்சூர் அருகே, 5 ஏக்கர் பரப்பில் ஒரே நேரத்தில் 117 பேருந்துகள் நிறுத்தும்அளவுக்கு இந்த தனியார் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
இதில் ஓட்டுநா்கள், கிளீனா்கள் என 100 போ் தங்கும் அளவுக்கு இரண்டு கட்டடங் கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை (டிச.7) திறந்து வைத்தார்.